Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபார்முக்கு வந்த பாமக.. "ஆளுநர் ரவி இப்படியெல்லாம் செய்யக்கூடாது".. அன்புமணியா இப்படி பேசுவது?

ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை காலமும் பொறுமையாக இருந்த பாமக, இன்று வெளிப்படையாகவே பாஜகவை எதிர்த்துள்ளது.. நீட் விஷயத்தில் ஆளுநர் ரவி, அரசியல் செய்கிறார் என்று ஓபனாகவே போட்டு உடைத்துவிட்டது.
பாமக சமீப காலமாகவே அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த முறை தனித்தே போட்டியிட்டது. கூட்டணியும் சேரவில்லை.

வட மாவட்டங்களில் உள்ள ஓட்டு வங்கி நமக்குதான் என்ற நம்பிக்கையில் இருந்த பாமகவுக்கு நடந்து முடிந்த தேர்தல் பெரும் அதிர்ச்சியையும், அடியையும் கொடுத்துள்ளது...

 வடமாவட்டம்

வடமாவட்டம்

இத்தனைக்கும் செல்லுமிடமெல்லாம் வன்னியர் இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்ததை தங்களின் வெற்றியாக பிரச்சாரம் செய்து வந்தனர்.. ஒருகாலத்தில் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரித்த கட்சி என்பதுடன் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அலற வைத்த கட்சியும்கூட.. சுருக்கமாக சொல்லப்போனால், பாமக எந்தக் கூட்டணியில் இணைகிறதோ அந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்..

 கருணாநிதி

கருணாநிதி

அதனால்தான், கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, முதலில் பாமகவுடன் தான் கூட்டணி, தொகுதி பங்கீடு, சீட் விவகாரங்களை முடிவு செய்வார்கள். இன்று நிலைமை தலைகீழாகிவிட்ட நிலையில், அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் இறங்கி வருகிறார்.. பொதுவாக, பாஜக என்றாலே அவ்வளவாக எதிர்ப்பை பாமக இதுவரை காட்டியது இல்லை.. அதேசமயம், இந்தி மொழி, சமஸ்கிருத திணிப்பு என்றால், கொந்தளித்துவிடும்..

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

கூட்டணியில் நீண்ட காலமாகவே இருந்ததால், அதிருப்தி கருத்துக்களை வெளியிடாமல் வந்த நிலையில், இன்று நீட் விஷயத்தில் பாமக அப்செட் ஆகி உள்ளது. ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக, வெளிப்படையாகவே இன்று அன்புமணி கூறியுள்ளார்.. செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் இன்று சொன்னதாவது: "வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு வருத்தம் தருகிறது.. இருந்தாலும், ஹைகோர்ட் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் 6 கேள்விகள் தவறானவை என்பதை சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துள்ளது.

 விழுக்காடு

விழுக்காடு

உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது... அதனால், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மறுபடியும் சட்டமியற்ற வேண்டும்... சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது.

 ஒதுக்கீடு

ஒதுக்கீடு

ஆனால், மற்றவர்கள் சொல்வது போல அதிமுக அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீடு சட்டம் அவசரகதியில் கொண்டுவரப்பட்டது அல்ல. நீண்டகால கோரிக்கைக்கு பின்பு முறையான கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது" என்றார்.

 நாம் தமிழர்

நாம் தமிழர்

ஏற்கனவே டாக்டர் ராமதாஸ், இதே நீட் விவகாரத்தில் ஆளுநர் விஷயத்தில் அதிருப்தி காட்டியிருந்தார்.. அதில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுனர் அவரது பாதுகாப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருந்த நிலையில், இன்று அன்புமணியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ், மதிமுக, நாம் தமிழர் வரிசையில் பாமகவும் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+