தான்தோன்றி தனமாக செயல்பட்டால் இதுதான் நிலைமை: இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம்-பூவுலகின் நண்பர்கள்
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற கூற்று மெய்பிக்கப் பட்டு இருப்பதாக ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவுக்கு மீண்டும் கொரோனா பெருந்தொற்று கவலையாக மாறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது. ஆனாலும் ஜீரோ கோவிட் பாலிசி என்று கூறி கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சீனா கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்தியது.

தினசரி பாதிப்பு 30 ஆயிரம்
உலக நாடுகள் எல்லாம் தவித்தாலும் சீனாவில் பெரிதாக பாதிப்பு இல்லை. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பரவலின் தீவிரம் தணிந்துவிட்டது. ஆனால், இப்போது கொரோனா வைரஸ் பரவலால் சீனா ஆட்டம் கண்டு வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம்.. 40 ஆயிரம் என்று பதிவாகி வருவதால், சீனா மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கிறது. பல லட்சம் பேர் வசிக்கும் நகரில் ஒருவருக்கு கொரோனா என்றால் கூட ஒட்டு மொத்த நகரமும் முடக்கப்படுகிறது.

வீதிகளில் இறங்கி போராட்டம்
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் கொதித்து போன சீன மக்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல்கலைழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிகளில் இறங்கி போராடினர். போராட்டக்காரர்கள் பலரும், எங்களுக்கு சுதந்திரம் தான் வேண்டும், கட்டுப்பாடுகள் வேண்டாம் என்று கோஷங்கள் எழுப்பிய படி போராடினர்.

ஜி ஜின்பிங்கிற்கும் கடும் தலைவலி
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பியதையும் காண முடிந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது சீன அரசுக்கு அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் கடும் தலைவலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், பூவூலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன், தான் தோன்றித்தனமாக செயல்படும் ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற கூற்று மெய்பிக்கப் பட்டு இருப்பதாக ட்விட் பதிவில் வெளியிட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரம்
இது தொடர்பாக ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சீனாவில் அதிபர் ஜீபிங்கிற்கு எதிரான போராட்டங்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன, எங்களுக்கு தேவை "ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம்" என அதிபர் படித்த பல்கலைக்கழக வளாகத்திலேயே கோஷங்கள் அதிர்கின்றன. தான்தோன்றிதனமாக செயல்படும் ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பாட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் சாதாரண மக்கள் வெகுண்டு எழும் காலம் விரைவாகும் என்கிற கூற்றை சீனாவில் நடைபெறும் போராட்டங்கள் மெய்பிக்கின்றன. இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு பாடம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications