சென்னையில் மாவோயிஸ்ட் கைது..! எண்ணூரில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைத்து பிடித்தனர் போலீசார்!
சென்னை: ஜார்கண்ட் போலீசால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் சென்னை எண்ணூாில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பற்றி அம்மாநில போலீசார் அளித்த தகவலின் பேரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஜார்கண்ட் . இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் மீது 14 வழக்குகள் இருந்த நிலையில் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாததால், அவரை ஜார்க்கண்ட் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சென்னை எண்ணூர்
இந்நிலையில் ஜார்க்கண்டில் தப்பியோடிய மாவோயிஸ்ட், சென்னை எண்ணூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து கொண்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது ஜார்கண்ட் மாநில போலீசார் செல்போன் டவர் மூலம் கண்டறிந்து சென்னை எண்ணூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்,

மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச்
அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை எண்ணூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் செல்போன் டவரை வைத்து சோதனை மேற்கொண்டபோது எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் எண்ணூர் தெர்மல் அனல் மின் நிலைய அருகே கட்டுமான பணிகளில் பணியில் மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது,.

விசாரணை
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜார்கண்ட் மாநிலம் அசரிபாக் மாவட்டத்தை சேர்ந்த சுகார் கஞ்ச் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர் விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக் காம்ரேட் மாவோயிஸ்ட் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும் எதற்காக கட்டுமான பணிகளில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

மனைவியிடம் பேசினார்
இதனிடையே மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் கைது குறித்து போலீசார் வெளியிட்ட செய்தியில், "சுக்கர் கஞ்சு(31) (மவோயிஸ்ட் தீபக் காம்ரேட் அணியை சேர்ந்தவர்), த/பெ.கமல் கஞ்சு, பூச்சாட்திக் கிராமம், கேராதாரி போஸ்ட், அசாரிபாக் மாவட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் எண்ணூர் அனல் மின் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் Contract ல் சுரேஷ் என்பவரிடம் கடந்த 9 மாதமாக தங்கி இங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளதால். மேலும் இவர் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணின் டவர் லோக்கேஷன் மூலம் அறிந்த ஜார்க்கண்ட் மாநில போலீசார் சென்னை மாநகர காவல் ஆணையளார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை தீவிரம்
அதன்பேரில் எண்ணூர் AC Spl Team SI நந்தகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் 26.10.2021 ம் தேதி 18, 30 மணிக்கு மேற்படி நபரை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில். அவர் மீது ஜார்கண்ட் மாநிலம் பல வழக்கில் தேடப்பட்டு வருவதும், கஞ்ச் மீது செக்சன் 302 கொலை வழக்கு 2, 2) 307 கொலை முயற்சி 3 வழக்கும், 3) வெடி குண்டு வீசியது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications