பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எழுதியதாக பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் +2 மாணவியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது

கைது

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (57) தமிழகத்தின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதியின் நினைவு நாளில் (11-09-2022) சென்னையில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

கள்ளக்குறிச்சி வழக்கு

கள்ளக்குறிச்சி வழக்கு

இன்று முற்பகலில் சீருடை அணியாத நான்கு போலீசார் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை கைது செய்திருக்கின்றனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவருடைய மனைவியின் செல்போனையும் வாங்குவதற்கு முயற்சித்து உள்ளனர். சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம்‌ என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை செலுத்தி உள்ளனர். பின்னர், அங்கிங்குமாக விசாரித்த பிறகே சாவித்திரி கண்ணனைக் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துமீறல்

அத்துமீறல்

ஒரு பத்திரிகையாளரை - நீதிமன்ற வழிகாட்டல்களுக்கு முரணாக, சீருடையில் இல்லாத காவல் துறையினர் தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்து, எவ்விதத் தகவல்களும் தராமல், இப்படிக் கைதுசெய்திருப்பது மிக மோசமான செயல். அரசு ஒருவேளை உண்மைக்குப் புறம்பானது, சட்ட நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஏதேனும் செய்தியைக் கருதுமாயின் அப்படியான செய்திகளையும், செய்தியாளர்களையும் எதிர்கொள்ள ஜனநாயகத்தில் சட்டபூர்வமான வழிமுறைகள் நிறைய உள்ளன.

கோரிக்கை

கோரிக்கை

தமிழக அரசு அத்தகைய ஜனநாயக வழிமுறையைத்தான் கையாள வேண்டுமே அன்றி, இத்தகைய அடக்குமுறை வழியைக் கையாளக் காவல் துறையை அனுமதிக்கக் கூடாது. அந்த வகையில் 35 ஆண்டுகளாகத் தமிழகப் பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான இந்தக் கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் உடனடியாக தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்களை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழக முதல்வர் இதைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+