நேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது!
சென்னை: தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். கடிதம் எழுதிய மறுநாளே தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு.
முதல்வர் முக ஸ்டாலின் கேட்ட உடனேயே பிரதமர் மோடி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
எனினும் முக ஸ்டாலின் கேட்டது 510 மெட்ரிக் டன் என்கிற நிலையில் 419 மெட்ரிக் டன் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பதை, சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது.

வடமாநிலங்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறி வருகின்றன, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் என பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளாத மாநிலங்கள் என எல்லா மாநிலங்களுக்குமே கேட்ட ஆக்ஸிஜனை மத்திய அரசு அப்படியே ஒதுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
குறிப்பாக டெல்லி, கர்நாடகா மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டை தட்டி தங்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜனை ஒதுக்கக்கோரி போராடி வருகின்றன. ஆனாலும் கேட்ட ஆக்ஸிஜனை மத்திய அரசால் உடனே ஒதுக்க முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

மோசமான நிலை இல்லை
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவை சுமார் 1000 மெட்ரிக் டன்னிற்கு மேல் தேவை என்கிற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் அந்த அளவிற்கு மோசமான நிலையை எட்டவில்லை. எனினும் அடுத்த இருவாரங்களுக்குள் 800 மெட்ரிக் டன் அளவிற்கு தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதை ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவையை 419 மெட்ரிக் டன்னில் இருந்து விரைவாகவே தமிழகம் கேட்கும் அளவை ஒதுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஆக்ஸிஜன் அளவு
தற்போதைய நிலையில் ஈரோட்டில் இருந்து செயல்பட கூடிய national oxygen limited நிறுவனத்தில் இருந்து 38 மெட்ரிக் டன் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. சேலத்தில் உள்ள jsw steel limited நிறுவனத்தில் இருந்து 15 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு கொடுக்கப்பட கூடிய ஒதுக்கீடானது 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications