"கழுவேலி ஈரநிலம்" 16வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'கழுவேலி ஈரநிலத்தை' தமிழ் நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 15 பறவைகள் காப்பகங்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் தற்போது பறவைகள் காப்பங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கழுவேலி ஈரநிலம் 16வது சரணாலயம்
தமிழ்நாட்டில் 15 பறவைகள் சரணாலயங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'கழுவேலி ஈரநிலத்தை' தமிழ் நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சரணாலய எல்லைக்குள் 12 கிராமங்கள்
அரசு அறிவிப்பின்படி, மரக்காணம் தாலுக்காவில் உள்ள நடுக்குப்பம், செய்யாங்குப்பம், செட்டிக்குப்பம், அனுமந்தை, ஊரணி, கீழ்புதுப்பட்டு, கூனிமேடு, திருக்கனூர் ஆகிய கிராமங்களில் உள்ள கழுவேலி உவர் நீர் ஏரி சதுப்பு நிலப் பகுதியும், கிளாப்பாக்கம், கொழுவாரி, கழுபெரும்பாக்கம் தாலுகா, வானூர், தேவனான், காரட்டை ஆகிய கிராமங்களும் இணைக்கப்படும்.

மொத்த பரப்பளவு 5,151 ஹெக்டேர்
இந்த எட்டு கிராமங்களை உள்ளடக்கிய 3,027.25 ஹெக்டேர் பரப்பளவும், வானூரில் உள்ள ஐந்து கிராமங்களில் 2,124.35 ஹெக்டேர் பரப்பளவு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். கடற்கரை சதுப்பு நில ஏரியான கழுவேலி ஈரநிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவின் அருகில் அதாவது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரோவில் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஏற்கனவே 15 சரணாலயங்கள்
தற்போது தமிழ்நாட்டில் பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, கரைவெட்டி, வேட்டங்குடி, கூந்தன்குளம் போன்ற இடங்களில் 15 பறவை சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் வாழும் பறவைகளைப் பாதுகாக்க அப்பகுதிகள் பறவைகள் சரணாலயங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் சரணாலயங்களுக்குள் வந்து மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் திரும்பிச் செல்வது வழக்கம்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications