சன் டே.. முடங்கிய சென்னை ஈசிஆர்! சாலையை மறித்து பொதுமக்கள் திடீர் முழக்கம் - என்னாச்சு?
சென்னை: ஈசிஆர் சாலையில் ஊர்மக்கள் பயன்படுத்தி வந்த திடல் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ளது கானத்தூர். அதன் அருகே ஈசிஆர் சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி உள்ளது.
இங்குள்ள மந்தகல் திடல் என்ற பகுதியை பொதுமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

நிலம் ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் அப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மதில் சுவற்றை இடிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஒன்றுகூட தீர்மானம் நிறைவேற்றினர். அதன் அடிப்படையில் மந்தகல் திடலில் அமைக்கப்பட்டிருந்த மதில் சுவற்றை அவர்கள் இடித்தனர்.

பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கு வந்த சில அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்
இதனை கண்டித்து பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர். விடுமுறை நாளான இன்று பலரும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் சென்று வரும் நிலையில், சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய மார்கத்திலும், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய மார்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நீண்ட நேரமாக போக்குவரத்து சீராகாத நிலையில் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கார்கள் வந்த மக்கள் பலர் அதன் மீது ஏறி நின்று போராட்டத்தை பார்வையிட்டனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications