லோக்சபாவில் கனிமொழி கேட்ட கேள்வி.. "சம்மந்தம் இல்லாமல்" பதில் சொன்ன மத்திய அமைச்சர்.. சர்ச்சை
சென்னை: ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடம் தொடர்பாக திமுக எம்.பி. கேட்ட கேள்விக்கு, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் பதிலை பார்த்து ஆச்சரியப்பட்டு போனதாக கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
அப்படி என்ன நடந்தது.. ஏன் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இதோ அதுகுறித்த விவரம்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது ஆதிச்சநல்லூர். தொல்லியல் சிறப்புகள் வாய்ந்த ஊர். அகழாய்வில் பல ஆச்சரியத்தக்க முடிவுகள் வந்தபடி உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த வருடம், பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொல்லியல் சிறப்புமிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மத்திய அமைச்சரிடம் கேள்வி
ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. எனவே தூத்துக்குடி லோக்சபா எம்பி கனிமொழி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு எழுத்துப்பூர்வமாக கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அடுக்கடுக்கான கேள்விகள்
2020-21ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் துவங்கி விட்டதா என்றும், இந்த இடத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கி விட்டதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார். அவ்வாறு தொடங்கியிருந்தால் அது பற்றிய விவரம் தரப்பட வேண்டும், ஒருவேளை துவங்காவிட்டால் ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சர்ச்சையான பதில்
இதற்கு மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் தான் இப்போது சர்ச்சைக்கு காரணமாகியிருக்கிறது. அமைச்சர் தனது பதிலில், சோலார் மூலமாக இயங்கக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன, கழிப்பிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆடியோ மூலமாக மக்களுக்கு புரிய வைக்கும் விஷுவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, தகவல் பலகை பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

நிஜத்தில் அப்படி இல்லை
மேலும், அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்தாய்வு கட்டத்தில் திட்ட பணிகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் இந்த எழுத்துப்பூர்வமான பதிலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர் கனிமொழி. அதன், பின்னூட்டத்தில் அருங்காட்சியகம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தில் சுவர்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், சோலார் லைட் இருப்பதாகவும் அமைச்சர் பதில் அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படி எதையுமே பார்க்க முடியவில்லை.

நீண்ட லிஸ்ட்
மத்திய அமைச்சர் கொடுத்துள்ள இந்த பதில் ஆச்சரியமளிக்கிறது. முதலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அதுதான் எங்கள் முதன்மை கோரிக்கை என்று கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் சொல்லக் கூடிய தகவல்கள் 100 சதவிகிதம் உண்மையானதாக இருக்க வேண்டும். அதுதான் மரபு. ஆனால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறை ஆய்வு பகுதியில் எந்த ஒரு வளர்ச்சியும் நடக்காத நிலையில் மத்திய அமைச்சர் கொடுத்துள்ள நீண்ட லிஸ்ட் உண்மைக்கு மாறாக இருக்கிறது என்பதுதான் சர்ச்சைக்கு காரணம் ஆகியிருக்கிறது.

தவறான தகவல் அளிக்க கூடாதே
தவறான தகவல்களை அதிகாரிகள் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஒரு அமைச்சர் இப்படி தவறான தகவலை தந்துள்ளார் என்று, கனிமொழியின் டுவிட்டர் பின்னூட்டத்தில் பலரும் கருத்து தெரிவிப்பதை பார்க்கமுடிகிறது. ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பதிலை அளித்துள்ளது சரியான முன்னுதாரணம் கிடையாது என்று அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications