போட்டு கொடுத்த சசிகலா- கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் வலது கரம் சேலம் இளங்கோவனிடம் விசாரணை?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமும் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் கொடநாடு எஸ்டேட் காவலர் ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலம் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து உயிரிந்தனர்.

தீவிரமான மறுவிசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மறு விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார், கனகராஜின் உறவினர்கள், கொடநாடு ஊழியர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

சசிகலாவிடம் விசாரணை
பின்னர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், ஆறுக்குட்டியின் தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் விசாரித்தது. மேலும் சென்னையில் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

போட்டுக் கொடுத்த சசிகலா?
2 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை சசிகலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடநாடு பங்காளவில் என்னென்ன இருந்தது? காணாமல் போன பொருட்கள் எவை? என 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர் தனிப்படை போலீசார். இதனடிப்படையில் தனிப்படை போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் இளங்கோவனிடம் விசாரணை?
இதன் முதல் கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழன்னிசாமிக்கு மிக நெருக்கமான சேலம் இளங்கோவனை விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நிழல் முதல்வராக வலம் வந்தவர் சேலம் இளங்கோவன்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications