தமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரே நாளில் மாநிலத்தில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்கள். தமிழகத்தில் தற்போது 65,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் மட்டும் 1,00,804 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 2884 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 9.80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஊரடங்கு
இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, 15 நாட்கள் முழு ஊரடங்கு, வார இறுதியில் ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

50 சதவீதம்
இந்த நிலையில் தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபார கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை
இந்த நிலையில் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 9ஆயிரத்தை தாண்டியதால் கோயம்பேடு சந்தையை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 ஆவது மற்றும் 4ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.

கோயம்பேடு சந்தை மூடல்
தற்போது இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது. இதனால் கோயம்பேடு வியாபாரிகளு்ம பொதுமக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications