விஜய் அறிவித்த 2 பேர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணல.. கடைசி நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளர்களில் இருவர் வேட்புமனுவே தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஊத்தங்கரை மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் அறிவித்த குமரவேல் மற்றும் அம்ரிஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதற்கு பதிலாக ஊத்தங்கரையில் இளையராஜாவும், ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனு நேற்றோடு முடிவடைந்த நிலையில் விஜய் வேட்பாளராக அறிவித்த இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரியந்துள்ளது.

அதாவது சென்னையில் நடந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக விழாவின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் விஜய் வேட்பாளர்கள் அறிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதி தவெக வேட்பாளராக குமரவேல் அறிவிக்கப்பட்டார். நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் அவருக்கு பதிலாக இளையராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த இளையராஜா தவெகவில் இணைந்தார். இதையடுத்து ஊத்தங்கரை தொகுதி வேட்பாளராக இருந்த குமரவேல் மாற்றப்பட்டு இளையராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளராக முதலில் அறிவித்துவிட்டு கடைசியில் வேட்பாளர் மாற்றப்பட்ட நிலையில், குமரவேலும் நேற்று சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதேபோன்று ஓசூர் தொகுதி வேட்பாளராக தவெக சார்பில் விஜய்யால் அறிவிக்கப்பட்டிருந்த அம்ரீசும் மாற்றப்பட்டுள்ளர். அம்ரீசுக்கு பதில் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள வடிவேல் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
வடிவேல் நேற்று ஒசூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்ரிதி சேத்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கடைசி நேரத்தில் இரண்டு வேட்பாளர்களை தவெக மாற்றியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை இன்று நடந்து வருகிறது. இதில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோன்று புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பெரம்பூர், திருச்சி கிழக்கு, 2 தொகுதிகளிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்பு! பாமக எதிர்ப்பால் 30 நிமிடம் கெடு! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி? -
1 மணி நேரம் போதாதா? இன்னும் 15 நாள்தான் இருக்கு.. விஜய்யும் தள்ளாடும் தமிழக வெற்றிக் கழகமும்! -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம் -
சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மட்டும் இல்லை.. நாடே உற்று பார்க்கும் 27 விஐபி தொகுதிகள்.. லிஸ்ட் -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன? -
“விசில் ஊதினால் போதும்.. குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்”.. தவெக செங்கோட்டையன் விநோத பிரச்சாரம்! -
என் கதை முடிந்து விட்டதா? திரிஷா ஆவேசம்.. அவருடன் திருமணம், நான்கு குழந்தைகள்.. ஓபனாக வெளியிட்ட போஸ்ட் -
ஈரோடு மணி 2500 ரூபாய் கொடுத்தாரா உஷார் 2 காரணங்கள் காங்கேயம் தேர்தலில் திருப்பூர் பரபரப்பு -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா?












Click it and Unblock the Notifications