ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தீரன் சின்னமலை... நினைவை போற்றி வணங்கிய தலைவர்கள்..!
சென்னை: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து மறைந்த தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது திருவுருவப் படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளான இன்று சென்னையில் கலைஞர் நிறுவிய தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.'' எனக் கூறியிருக்கிறார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள நினைவு தினச் செய்தியில்; ''ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டு வெற்றிகள் பல கண்டு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தீரன் சின்ன மலை என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இம்மண்ணின் விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை என்றும் அவர்தம் நினைவுநாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
இதனிடையே சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்திய சீமான், வீரமிக்க தமிழ் மூதாதையர்களில் தீரன் சின்னமலை வேறுபட்டவர் என்றும் சாதாரண குடிமகனாக இருந்து மக்களை ஒன்றுதிரட்டி படைகட்டி போராடி புரட்சி செய்தவர் தீரன் சின்னமலை என புகழாரம் சூட்டியுள்ளார்.
மரணத்தை கண்டு அஞ்சாத தமிழ் பெரும்பாட்டனான தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செலுத்துவதில், உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைவதாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications