லாக்டவுன் 6.0: சென்னை மாநகராட்சியில் ஜூன் 30 வரை இறைச்சி கடைகள் மூடல்
சென்னை: சென்னையில் வரும் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் வரும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு வீச்சில் அமல்படுத்தப்படுகிறது. கடந்த கால லாக்டவுன்களைப் போல அல்லாமல் முழுமையாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இறைச்சி கடைகள் மூடல்
இது தொடர்பான அறிவுறுத்தல்களை அரசு தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடக் கூடிய இறைச்சி கடைகளையும் வரும் 30-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

4 மாவட்டங்களில் ஊரடங்கு
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு , சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழுமையான ஊரடங்கை அமுல்படுத்த அறிவித்துள்ளது.

அனைத்து இறைச்சி கடைகளும் மூடல்
ஆகவே கோவிட்19 பெருந்தொற்று மக்களிடையே மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கூற்ய நான்கு இறைச்சிக் கூடங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகரஅட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி/ ஆடு/ மாடு இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகள் ஆகியவை 19.06.2020 முதல் 30.06.2020 முழுமையாக மூடப்படுகின்றன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை
எனவே பொதுமக்கள், வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்கனவே பல மாவட்டங்களில் லாக்டவுன் காலத்தில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications