லாக்டவுன் 6.0: சென்னை மாநகராட்சியில் ஜூன் 30 வரை இறைச்சி கடைகள் மூடல்
சென்னை: சென்னையில் வரும் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் வரும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு வீச்சில் அமல்படுத்தப்படுகிறது. கடந்த கால லாக்டவுன்களைப் போல அல்லாமல் முழுமையாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இறைச்சி கடைகள் மூடல்
இது தொடர்பான அறிவுறுத்தல்களை அரசு தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடக் கூடிய இறைச்சி கடைகளையும் வரும் 30-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

4 மாவட்டங்களில் ஊரடங்கு
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு , சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழுமையான ஊரடங்கை அமுல்படுத்த அறிவித்துள்ளது.

அனைத்து இறைச்சி கடைகளும் மூடல்
ஆகவே கோவிட்19 பெருந்தொற்று மக்களிடையே மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கூற்ய நான்கு இறைச்சிக் கூடங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகரஅட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி/ ஆடு/ மாடு இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகள் ஆகியவை 19.06.2020 முதல் 30.06.2020 முழுமையாக மூடப்படுகின்றன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை
எனவே பொதுமக்கள், வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்கனவே பல மாவட்டங்களில் லாக்டவுன் காலத்தில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications