லோக்சபா.. தமிழகத்தில் 845 பேர் போட்டி.. 742 பேர் நிராகரிப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடக்கிறது. இதனால் தமிழக தேர்தல் களம் அதிக கவனம் பெற்றுள்ளது. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்காக இதுவரை அதிமுக, திமுக, பாமக, விசிக, தேமுதிக, அமமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இவர்கள் எல்லோரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எப்போது நடந்தது
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 19ம் தேதி துவங்கியது. மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. பல முக்கியமான வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

யார் எல்லாம்
திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் 25, 24ம் தேதிகளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அமமுகவினர் கடைசி நாளான 26ம் தேதி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பரிசீலனை நடந்தது
இதையடுத்து வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மூன்று மணிக்கு இதற்கான அவகாசம் முடிவடைந்தது. இதையடுத்து இதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

என்ன முடிவு
அதன்படி 39 மக்களவைத் தொகுதிகளில் 1596 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 9 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளதில் 845 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 742 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications