போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பென்ஷன் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. ஓய்வூதியதாரர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 1998 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Madras High Court ordered to provide TNSTC employees pensions on basis of Seventh Pay Commission

அந்த மனுவில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலையில், 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கப்படும் என உத்தரவிட்டது பாரபட்சமானது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், 2016 முதல் 2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது எனக் கூறி, 2016க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் அந்த அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+