உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதியில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் இரண்டாவது முறையாகப் போட்​டி​யிடு​கிறார். இந்​நிலை​யில், உதயநிதி தற்​போது தாக்​கல் செய்​துள்ள வேட்​பு மனு​வில் குறிப்​பிட்​டுள்ள சொத்து விவரங்​களுக்​கும், 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் உள்ள சொத்து விவரங்​களுக்​கும் முரண்​பாடு​ இருப்​ப​தாகக் ​கூறி சேப்​பாக்​கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

Madras High Court Questions Asset Details in Udhayanidhi Stalin s Nomination

இதுதொடர்​பாக அவர் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், உதயநிதி ஸ்டா​லின் 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​பு மனு​வில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​திருந்​த​தாக குறிப்​பிட்டு இருந்​தார். ஆனால், தற்​போதைய தேர்​தல் வேட்பு மனு​வில் அந்த விவரங்​கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்​தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த பரிவர்த்​தனை தொடர்​பாக முறை​யான விளக்​கங்​கள் வேட்​புமனு​வில் தெரிவிக்​கவில்​லை. கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​பு மனு​வில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறு​வனத்​துக்கு கடன் கொடுத்​துள்​ள​தாக கூறி​யுள்ளார். ஆனால், தற்​போது ரூ. 10 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ. 1 கோடியே 6 லட்​சம் பணம் திருப்பி செலுத்​தப்​பட்டு விட்​டதா என்ற விவர​மும் தெரி​விக்​கப்​பட​வில்​லை.

2020 ஆம் ஆண்​டுக்கு முன்​பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வரு​மானம் உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்ள உதயநிதி, தற்​போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வரு​மானம் உயர்ந்​துள்​ள​தாகத் தெரி​வித்​துள்​ளார். வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்​புக்கு உரிய விளக்​கம் அளிக்​கப்​பட​வில்​லை. தனக்​குள்ள சொத்​துகள் குறித்து முரண்​பா​டான தகவல்​களை வேட்​பாளர்​கள் வேட்​பு மனு​வில் தெரி​விப்​பது மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்கு எதி​ரானது.

எனவே, இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​தும்​படி வருமான வரித்​துறை​யின் புல​னாய்வு அமைப்​புக்​கும், மத்​திய கம்​பெனிகள் விவ​காரத் துறைக்​கும் உத்தர​விட வேண்​டும்" என மனு​வில் கோரி​யுள்​ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அமர்​வில் இன்று விசா​ரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+