உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில், உதயநிதி தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடு இருப்பதாகக் கூறி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உதயநிதி ஸ்டாலின் 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தற்போதைய தேர்தல் வேட்பு மனுவில் அந்த விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனை தொடர்பாக முறையான விளக்கங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. கடந்த 2021-ல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது ரூ. 10 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய ரூ. 1 கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டுக்கு முன்பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி, தற்போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்புக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. தனக்குள்ள சொத்துகள் குறித்து முரண்பாடான தகவல்களை வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறையின் புலனாய்வு அமைப்புக்கும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications