முண்டாசு கவிஞர் பாரதியார் 139-வது பிறந்தநாள்... நினைவுகூர்ந்து கொண்டாடிய மக்கள்...!
சென்னை: முண்டாசு கவிஞர் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள பாரதி சிலைக்கு மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் சமூக வலைதளங்களிலும் மகாகவி பாரதியாரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பதிவிட்டு சமூக வலைதள ஆர்வலர்கள் முண்டாசு கவிஞரை நினைவு கூர்ந்தனர்.

பாரதியாரின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்றவைகள் காலத்தால் அழியாத காவியமாக நிலைத்து நிற்கின்றன. சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியாரின் எழுச்சிமிகு வரிகள் இளம் காளையர்களை வீறுகொண்டு எழச் செய்தன. தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தேச உணர்வை ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர் பாரதியார்.
சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாரதியாரின் வரிகள் சாதி ஒழிப்புக்கான முன்னோடி முற்போக்கு நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன. இதேபோல் பெண்களை பெருமிதப்படுத்தும் வகையில் பல பாடல்களை இயற்றியுள்ளார் பாரதியார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எனப் பாடி பெண் உரிமைக்காக முதல் குரல் கொடுத்தவர்.
இப்படி எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்ட பாரதியார், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை வறுமையில் கழித்தவர். பாரதியார் இன்று இல்லை என்றாலும் அவரது கவிதைகளும், தேச உணர்வு பாடல்களும் இன்னும் நூற்றாண்டு கடந்தும் நிலை நிற்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications