அப்பவே தற்கொலை செய்திருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.. கதறி அழும் மகரிஷி பள்ளி ஆசிரியர் ஆனந்த்
சென்னை: என்னிடம் படித்த மாணவ, மாணவிகளை எனது குழந்தைகளாகவே பார்த்தேன் என சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அவரிடம் படித்த மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்து வந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன் தினம் ஆனந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வைத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

கண்ணீர் விட்ட ஆசிரியர்
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் அளித்த வாக்குமூலத்தில் என்னிடம் கல்வி பயின்ற மாணவர்களை எனது குழந்தைகளாகவே நான் நினைத்தேன். எனது பாடம் நடத்தும் முறையை பார்த்து குழந்தைகளும் என்னிடம் பிரியமாக பழகினார்கள்.

ஆடையை சரி செய்தேன்
என்னிடம் படித்த மாணவிகள் சரியாக ஆடை அணிய வேண்டும் என நினைப்பேன். ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்துள்ளேன். அப்போது கூட நான் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு என்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள்.
Recommended Video

ஆதரவு
என்னை பற்றி நீங்கள் (போலீஸார்) விசாரிக்க தொடங்கியவுடனேயே நான் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் என் மீது யாரும் புகார் கொடுக்காததால் அந்த முடிவை கைவிட்டேன். மேலும் நான் இல்லாவிட்டால் எனது தாயாரும் ஆதரவற்றவராகிவிடுவார் என்பதால் அந்த முடிவை கைவிட்டேன்.

போலீஸ் பாதுகாப்பு
ஆனால் நான் தவறு செய்துவிட்டேன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவுடனேயே நான் இறந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்த் மனநிலை உடைந்து காணப்படுவதால் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications