ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை! முக்கிய ஆவணங்கள் திடீர் மாயம்? டென்ஷனான நீதிபதி! ஒரே பரபரப்பு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இன்று விசாரணை போது, அங்கு நடந்த சம்பவத்தால் நீதிபதி கடும் கோபம் அடைந்தார்.
Recommended Video
கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி பாலியல் தொல்லை அளித்தாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் கூறிய பதிலைக் கேட்டு நீதிபதிகள் கோபமடைந்தனர்.

பாலியல் தொல்லை
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது தமிழக போலீஸில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

புகார்
இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் அப்போது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், புகார் அளிக்கச் சென்ற போது, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்த செங்கல்பட்டு எஸ்.பி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.

மிரட்டல்
அதாவது புகார் அளித்தால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டும் வகையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாயம்
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கின் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி - பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் மற்றும் அவர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் தகவல்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கிடைத்தது
அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவண நகல்களை மீண்டும் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். பெண் எஸ்பி தொடர்பான வழக்கிலேயே முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தீவிரமாகத் தேடியுள்ளனர். அப்போது அங்கிருந்த ஆவணங்கள் கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
-
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி 'கருப்பு' படம் பார்த்த கைதி.. தியேட்டர் இன்டர்வெல்லில் கிளைமாக்ஸ்! -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications