மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மிககனமழை.. சென்னையையும் விடாதாம்..புது அப்டேட்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானது. இந்த புயல் நேற்று இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. மேலும் புயல் கரையை கடப்பதால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரையை கடந்த புயல்
இந்நிலையில் தான் இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

8 மாவட்டங்களில் மிக கனமழை
அதன்படி இன்றைய மழை நிலவரம் பற்றி சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் கூட தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

7 மாவட்டங்களில் கனமழை
மேலும் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களிலும் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணி தீவிரம்
மேலும் மாண்டஸ் புயலால் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கடற்கரையில் நிறுத்தப்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. இதனை ஆய்வு செய்து சேத சீரமைப்பு பணியை தமிழக அரசு துவக்கி முடுக்கி விட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதோடு, அதுதொடர்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications