அரபிக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: நாளை மே 31ம் தேதிக்கு பிறகு அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Recommended Video
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த வருடம் ஜூன் 5ஆம் தேதி பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இரண்டு நாட்கள் முன்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கூறப்பட்டது.

ஓமன் நோக்கி புயல்
ஆனால் இப்போது அதில் மற்றொரு திருப்பமாக, அரபிக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது, மே 31ம் தேதிக்கு பிறகு புயலாக வலுப்பெற்று ஓமன் நாட்டை நோக்கி நகரத் தொடங்கும். இதன் பாதிப்பால் காற்று சுழற்சி ஏற்படுவதால், தென்மேற்குப் பருவமழை துவங்குவது தாமதமாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

பாதிப்பு இல்லை
இந்த புயலால் நேரடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்ற போதிலும், பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இன்று தமிழகத்தின் 8 மேற்கு மாவட்டங்களில், கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை
நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 104.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. மேலும், கடலூர் மற்றும் கரூர் பரமத்தி பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications