வெளிநாடுகளே திரும்பி பார்க்கும்! புதுப்பொலிவு பெறும் மெரினா.. களமிறங்கிய மாநகராட்சி.. பிளான் என்ன?
சென்னை: மெரீனா சாலையை அழகுபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.. இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது.
இந்த நிலையில் மெரினா கட்டுரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மெரினா
கண்ணகி சிலை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதி, உழைப்பாளர், காந்தி சிலை என்று பல சிலைகள், நீர் ஊற்று, அலங்கார கற்கள், சிறிய கூட்டம் நடத்தும் மேடைகள் என்று பல அமைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு இருக்கும் செயற்கை நீர் ஊற்று சமீபத்தில்தான் சீரமைக்கப்பட்டது. அங்கு விளக்குகளும் வைக்கப்பட்டது. அதேபோல் கல் அலங்கார அமைப்புகளும் சீரமைக்கப்பட்டன.

கடற்கரை
இந்த நிலையில்தான் மெரினாவில் 6 கிமீ சாலை பகுதியை புதிதாக அலங்காரம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இங்கு புதிய அலங்கார அமைப்புகள், கண்கவர் அமைப்புகள், புதிய விளக்கு அமைப்புகள், சிறிய அளவிலான பார்க்குகள், உணவகங்களை வைக்க வசதி என்று பல ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனை
அதன்படி நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில் துறை என்று பல அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த சாலை பகுதிகளில் முக்கியமான அரசு கட்டிடங்கள், அதேபோல் சமாதிகள் உள்ளன. இதனால் எந்த தவறும் நேராமல் புதிய அலங்காரங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் பீச்களை மிஞ்சும் அளவிற்கு வித்தியாசமான அலங்காரங்களை செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

கடைகள்
ஏற்கனவே மெரினாவில் இருக்கும் சாலை ஒரே கடைகள் பயன்படுத்துவதற்காக சிறிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை இன்னும் சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். ஸ்மார்ட் புஷ் அமைப்பு கொண்ட தள்ளு வண்டிகள் ஆகும். இதை விரைவில் கடைக்காரர்கள் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 29 கோடி ரூபாய் இல்லாமல் மேலும் சில கோடிகள் விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications