மருத்துவக் கழிவுகளால் குப்பை காடான போரூர் ஏரி .. நேரடியாக ஆக்சனில் இறங்கிய மா.சுப்பிரமணியன்!
சென்னை: சென்னை போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த ஏரியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன், குப்பைகளை யார் கொட்டினாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
Recommended Video
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய முக்கிய ஏரிகளுள் ஒன்றான போரூர் ஏரிக்கு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி ஆகியோர் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடங்களில் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

காம்பவுண்ட்
போரூர் ஏரிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து காம்பவுண்ட் அமைக்க வேண்டும் குப்பைகள் கொட்டாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குப்பை கொட்டப்படுகிறது
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : போரூர் ஏரி மொத்தம் 252 ஏக்கர் அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும் மரம் செடிகள் வளர்ந்து இடமாகவும் மாறி உள்ளது

குடிநீர் பயன்பாடு
அனைத்து துறைகளையும் சேர்த்து இங்கு உள்ள மரம் செடி கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முழுமையாக காம்பவுண்டு சுவர் அமைக்கப்படும். போரூர் ஏரியில் வெளி வாகனங்களிலிருந்து குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்

அமைச்சர் மா சுப்பிரமணியன்
குப்பைகளை யார் கொட்டினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் . கடந்த 10 ஆண்டுகளாக ஏரி பராமரிக்கப்படாமல் மண் கொட்டி மூடி தனி நபர் நன்மை அடையும் வகையில் முயற்சிக்கப்பட்டது. அப்போது திமுக மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் மீட்கப்பட்டது " என தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications