சென்னையில் மெட்ரோ பணி.. மெரினாவில் உள்ள காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்.. இடத்தேர்வு பணி தீவிரம்
சென்னை: மெட்ரோ ரெயில் அமைக்கும் பணிக்காக சென்னை மெரினாவில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இந்த பணிகளினால் இங்குள்ள காந்தி சிலை சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக சிலை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
சென்னையின் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மெரினாவில் மெட்ரோ பணி
தற்போது சென்னை மெரினாவில் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பாதைகள் அமைப்பதற்காக சுரங்க பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலைகளில் இந்த சுரங்கப்பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகளில் இருபுறமும் இரும்பு வேலியிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காந்தி சிலை அகற்றப்படுகிறது
இந்த நிலையில் இந்த சுரங்க பணியின் போது சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை சேதமடைந்துவிட கூடாது என்பதற்காக பணிகள் முடியும் வரை தற்காலிகமாக காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி சிலையை வேறு இடத்தில் வைப்பதற்கான இடத்தேர்வு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடற்கரையில் உள்ள காந்தி சிலை சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இடம் தேர்வு செய்யும் பணி
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற சென்னை மாநகராட்சியும் தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையும் காந்தி சிலையை மெரினா கடற்கரையிலேயே வேறு இடத்தில் வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தற்காலிகமாக வேறு இடத்தில்
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்படும். அதுவரை மட்டும் காந்தி சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவின் அடையாளமாகவும் காந்தி சிலை இருந்து வருகிறது. கடந்த 1959-ம் ஆண்டு நாட்டின் அப்போதைய பிரதமர் நேருவால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை மெரினாவில் நம்ம சென்னை செல்பி மேடையை சுற்றிய பகுதிகளும் மெட்ரோ பணியின் காரணமாக சுற்றிலும் அடைப்புகள் வைத்து மூடப்பட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications