சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால் தணிந்த வெப்பம் - சில்லென்று மாறிய வானிலை
சென்னை மாநகர், புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசி வருகிறது.
சென்னை: கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்த நிலையில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசி வருகிறது.
Recommended Video
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது.
கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவில் மழை
வானிலை மையம் அறிவித்தது போல சென்னை மாநகர் புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. சென்னை தியாகராய நகர், கிண்டி ,மீனம்பாக்கம் ,தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழை
அதே போல கேகே நகர் ,ராமாபுரம், வளசரவாக்கம் ,போரூர் ,வடபழனி ,கோயம்பேடு ,அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர், மாதவரம் ,வில்லிவாக்கம் ,சோழிங்கநல்லூர், பூந்தமல்லி பகுதிகளில் கனமழை பெய்தது.

தேங்கிய மழை
நள்ளிரவு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் கொட்டித்தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து அதிகாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது.

மழையை எதிர்பார்க்கலாம்
28ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், மற்றும் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளதால் சென்னையில் இன்றும் மழையை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications