பேராசிரியர் க அன்பழகன் 100ஆவது பிறந்தநாள் விழா.... சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழனின் 100வது பிறந்த நாள் விழா திமுகவினரால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் சென்னை நந்தனத்தில் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நந்தனம் நிதித்துறை வளாத்தில் பேராசிரியர் க.அன்பழகன் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் அந்த வளாகத்திற்கும் க.அன்பழகன் பெயரை சூட்டியுள்ளார்.

இனமான பேராசிரியர் என கருணாநிதியால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் பேராசிரியர் தம்பி என்று அன்போடும் அழைத்து போற்றப்பட்டவர் க.அன்பழகன் தன்னுடைய கல்வி பயணத்தின்போது தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளாலும், அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றலினாலம் ஈர்க்கப்பட்டு தன்னை பொதுவாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டவர்.
அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று 1944ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றியவர் க.அன்பழகன். இதனால் பேராசிரியர் க.அன்பழகன் என்றுதான் எல்லோரும் அன்புடன் அவரை அழைப்பர். 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் 2020ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தன்னுடைய 97வது வயதில் காலமானார்.
இந்நிலையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 100ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவை போற்றும் வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துளை வளாகத்தில் மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பேராசிரியரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக நிறுவப்பட்டுள்ள க.அன்பழகன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் நந்தனத்தில் செயல்பட்டுவரும் நிதித்துறை வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" என பெயர் சூட்டியுள்ளார். இதுமட்டுமின்றி பேராசிரியர் க.அன்பழகனால் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட 42 நூல்களுக்கு மாநில அரசின் ராயல்ட்டி தொலை 25 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் பங்கு பெற்றனர்.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications