பரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்
சென்னை: மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் வெளியான பிறகும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார் என திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் வெளியான பிறகும், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார்.

நேற்று பரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகள் அவரை புகார் அளிக்காமல் இருக்க மிரட்டியுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. அவருக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது மூத்த அதிகாரியின் தவறான நடத்தை வெளிச்சத்திற்கு வந்த பிறகும் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார். பரனூர் டோல்கேட்டில் நேற்று அவர் சக அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டார்.
மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் வெளியான பிறகும், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார். (1/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 26, 2021
அவர் புகார் பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டினார். இது வெட்கக்கேடானது. உடனடியாக நீதி கோருகிறோம் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications