பட்டியலின மக்கள் மதம் மாறினால் எஸ்சி இல்லை! சாதி சான்றிதழ் செல்லாது! அதிரடியாய் சொன்ன அருண் ஹால்தர்!
சென்னை : பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு செல்ல தனிப்பாதை உள்ள முறை மாற்றப்பட வேண்டும், மற்றும் மதம் மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்.சி) என சான்றிதழ் வழங்க வேண்டுமென பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறப்படுகிறது.

பட்டியலின ஆணைய துணைத்தலைவர்
இந்நிலையில் தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர், சென்னை வந்து தேசிய பட்டியலின ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது பேசிய அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

200 புகார்கள்
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," "கடந்த ஒன்றரை வருடத்தில் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அவற்றில் இதுவரை 60 வழக்கு தீர்வுக்காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதலிடம்
பட்டியலின மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் இந்தியாளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் பல இடங்களில் பட்டியலின மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது குறித்தான விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

சாதி சான்றிதழ் செல்லாது
பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறியவர்களுக்கு பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் ஆகும். இது குறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது." என கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications