ட்யூசன் எடுத்தா நல்லாசிரியர் விருது நோ! பள்ளிக்கல்வித்துறையின் ’வாத்தி’ ரெய்டு! ஷாக்கான ஆசிரியர்கள்!
சென்னை : தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசியர் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது எனவும், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.
ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஆண்டு தோறும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம்.

நல்லாசிரியர் விருது
மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழக அரசின் சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் ஆண்டு தோறும் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை விருதுகள் வழங்கப்பட உள்ளன என அரசிடமிருந்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவார்.

புகார்கள்
அதன்பின்னர், 6 பேர் கொண்ட குழு அமைத்து விண்ணப்பித்த ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி, மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ள விருதுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றிலிருந்து விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படும். இந்நிலையில் அரசியல் சார்புள்ளவர்களுக்கும், நேரடியாக அரசியல் கட்சியில் தொடர்பில் இருப்பவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

நடைமுறையில் மாற்றம்
இதனையடுத்து இந்த விருது வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பாடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசியர் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

ட்யூசன் எடுத்தால் விருதில்லை
அதன்படி," டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது. அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். 5 ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர்கள் பணியாற்றிருக்க வேண்டும்."உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications