சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறது - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் இது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசாவை நோக்கி நகரக்கூடும் பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Recommended Video

    Chennai-க்கு நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    New storm breaks out in the Bay of Bengal - IMD warning

    இந்த நிலையில் தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் இது வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசாவை நோக்கி நகரக்கூடும் பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை காற்றழுத்த மண்டலம்.. வருகிறது கன மழை வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை காற்றழுத்த மண்டலம்.. வருகிறது கன மழை

    இதனிடையே அரபிக்கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனவும் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை டிஜி மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், தற்போது அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகுதான் அமைப்பின் திசை மற்றும் தீவிரத்தை அறிய முடியும். எவ்வாறாயினும், டிசம்பர் 3 ஆம் தேதி இரவு முதல் வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Indian Meteorological Department has forecast low pressure in the southern Andamans. The Meteorological Department has forecast that the depression will turn into a severe depression within 24 hours and then strengthen into a barometric zone which may move towards northern Andhra Pradesh and southern Odisha and then turn into a storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X