முஸ்லிம் சிறுவன் தாக்குதலில் “திருப்பம்”- நடந்ததோ சென்னையில்.. செய்தது “வட இந்தியர்” - பகீர் பின்னணி
சென்னை: குல்லா அணிந்த காரணத்துக்காக 8 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுவனை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் முஹம்மது இக்லாஸ். 8 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ரங்கராஜபுரத்தில் உள்ள ரஹீமா மசூதியில் குர்ஆன் மனனம் செய்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு 8 மணியளவில் மசூதியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முஹம்மது இக்லாஸ். அப்போது அவரை வழிமறித்த நபர் குல்லா ஒரு கேடா என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

சிசிடிவி
இது தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுவனின் சைக்கிளை இடிப்பது போல் வருகிறார். அப்போது வரை நோக்கி கோபமாக ஏதோ கத்தி அதட்டுவது பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவன் இக்லாஸ் தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.

போலீசில் புகார்
ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அனைவரும் சென்னை அசோக் நகர் காவல்நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்து புகாரளித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தாக்கியவர் கைது
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிறுவனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட நபரை இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் சிறுவனை தாக்கிய நபரை இன்று அசோக் நகர் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

பகீர் பின்னணி
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஹரிலால் என்பதும், வட இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் பல ஆண்டுகளாக சென்னையில் செல்போன் நிறுவனத்தை இவர் சில ஆண்டுகளுக்கு முன் மசூதி முன்பாக தகராறில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. அவர் மீது இரு தரப்பிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications