என்னதான் இரும்புன்னாலும் வலிக்குதுங்க.. ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்- கலங்கிய ஓபிஎஸ் மகன்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஜெயபிரதீப், என்னதான் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது, கட்சியினரை விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவால் அமைதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அதிரடி
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். நேற்று கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

ஓபிஎஸ் மகன்கள்
இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இன்னொரு மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெயபிரதீப் அறிக்கை
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.பி.ஜெயபிரதீப், "அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து, யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும்போது என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.

தர்மத்தின் பாதையில்
2001ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு, தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்!" என ஜெயபிரதீப் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?












Click it and Unblock the Notifications