என்னதான் இரும்புன்னாலும் வலிக்குதுங்க.. ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்- கலங்கிய ஓபிஎஸ் மகன்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஜெயபிரதீப், என்னதான் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது, கட்சியினரை விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவால் அமைதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அதிரடி
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். நேற்று கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

ஓபிஎஸ் மகன்கள்
இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இன்னொரு மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெயபிரதீப் அறிக்கை
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.பி.ஜெயபிரதீப், "அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து, யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும்போது என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.

தர்மத்தின் பாதையில்
2001ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு, தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்!" என ஜெயபிரதீப் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications