பரவும் ஓமிக்ரான்.. மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க.. பிரதமர் மோடி வேண்டுகோள்
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதிக கொரோனா பதிவு, போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக பரவி வரும் ஓமிக்ரான் திரிபு, கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ராஜேஷ் பூஷன்
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ஒட்டுமொத்த அரசு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, அதனை கையாள்வது குறித்து மாநில அரசின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு மிகவும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அரசு என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மருத்துவ கட்டமைப்பு
அதிகளவு மரபணு பரிசோதனைக்காக, மாதிரிகளை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய மோடி, குறைவான தடுப்பூசி, அதிக கொரோனா பதிவு மற்றும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

முன்னெச்சரிக்கை
தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications