பரவும் ஓமிக்ரான்.. மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க.. பிரதமர் மோடி வேண்டுகோள்
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதிக கொரோனா பதிவு, போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக பரவி வரும் ஓமிக்ரான் திரிபு, கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ராஜேஷ் பூஷன்
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ஒட்டுமொத்த அரசு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, அதனை கையாள்வது குறித்து மாநில அரசின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு மிகவும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அரசு என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மருத்துவ கட்டமைப்பு
அதிகளவு மரபணு பரிசோதனைக்காக, மாதிரிகளை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய மோடி, குறைவான தடுப்பூசி, அதிக கொரோனா பதிவு மற்றும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

முன்னெச்சரிக்கை
தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications