Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்னே ஒன்னு..கண்ணே கண்ணு! வாரிசுக்காக வரிந்து கட்டி கிளம்பிய ஓபிஎஸ்! இபிஎஸ்க்கு எதிராக பறந்த கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்த நிலையில், பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களோடு அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக இருந்த ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

மேலும் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை எனவும் அவரது அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்து செய்யுமாறு மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார்.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்," கடந்த 11-ந்தேதி அதிமுகவின் ஒரு சில பொறுப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால் கட்சிகளின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டேன்.

 புகார் அளிக்கப்பட்டுள்ளது

புகார் அளிக்கப்பட்டுள்ளது

அவர்கள் கூட்டிய சட்ட விரோத கூட்டங்கள், நிகழ்வுகள், கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான கூட்டங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி முதல் நிலை தேர்தல் இருந்து நீக்கி தங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை.

நிராகரிக்க வேண்டும்

நிராகரிக்க வேண்டும்

அதனால் அது செல்லுபடி ஆகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திர நாத்தை பொய்யான குற்றச்சாட்டு கூறி நீக்கியதாக தெரிவித்து உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஆதலால் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த தொடர்பு மேற்கொள்ள வேண்டாம், எவற்றையும் நடைமுறை படுத்த வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."என கூறியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத்

ஓ.பி.ரவீந்திரநாத்

இதனிடையே பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம்அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்," எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.அவர் கூட்டிய சிறப்பு பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அவரது கோரிக்கையையும், கடிதத்தையும் நிராகரிக்க வேண்டும்'' என கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு கடிதங்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா பரிசீலித்து வருவதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அவர் தனது முடிவு என்ன என்பது குறித்து தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+