இந்தோ திபெத் எல்லை போலீஸ் டிஜியாக தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமனம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம் எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய இயக்குநர் ஜெனரல் மற்றும் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் இயக்குநர் ஜெனரலை நியமித்துள்ளது.
அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1988ம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் தற்போது சிறப்பு எல்லை பாதுகாப்பு படை சிறப்பு எஸ்பியாக பணியாற்றுகிறார், அவர் எல்லை பாதுகாப்பு படை (டிஜி பிஎஸ்எஃப்) டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவார். 2022, டிசம்பர் 31 வரை இந்த பணியில் அவர் இருப்பார்.

1988ம் ஆண்டு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், தற்போது சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். அவர், இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் டிஜி ஐடிபிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் ஆகஸ்ட் 31ல் பணி ஓய்வு பெறுவதால் சஞ்சய் அரோரா ஐபிஎஸ் அந்த பதவிக்கு, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின், இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போதைய போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்என் ஸ்ரீவஸ்தவா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி புதிய போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்க நியமிக்கப்பட்டவர்தான் பாலாஜி ஸ்ரீவஸ்தவ். பாலாஜி ஸ்ரீவாஸ்தவா 1988 கேடர் அதிகாரி. ஸ்ரீவஸ்தவ் டெல்லி காவல்துறையில் சிறப்பு காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
பாலாஜி ஸ்ரீவஸ்தவா புதுச்சேரி மற்றும் மிசோரம் காவல்துறை தலைமை இயக்குனராகவும், அந்தமான் மற்றும் நிகோபார் காவல்துறை கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
-
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!!












Click it and Unblock the Notifications