பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இனி வந்தாச்சு அடுத்த சிக்கல்! ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: மின் கசிவால் தீவிபத்து நடப்பதை தவிர்க்கும் வகையில் ரயில்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி இரவு நேரத்தில் துண்டிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது முழுமையாக இந்தியா முழுவதுமே நடைமுறைக்கு வந்துள்ளது.
செல்போன் அத்தியாவசிமயமான ஒன்றாகவிட்டது. எனவே நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ரயில் கம்பார்ட்மெண்டின் இருபுறங்களிலும் செல்போன்களை சார்ஜ் செய்ய பிளக் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து
இந்நிலையில் செல்போன்களை பலர் சார்ஜ் போடும் போது சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மிட்னகசிவு ஏற்பட்டு விபத்துக்களும் நேருகிறது. இதையடுத்து மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க பிளாக் பாய்ண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11 முதல் நிறுத்தம்
ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போனை சார்ஜ் செய்ய அனுமதிக்ப்படமாட்டார்கள். சில ரயில்வே மண்டலங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் , இதுகுறித்து அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர-ஹசூர் ரயில் விபத்து காரணம்
ஏன் இப்படி ஒரு முடிவினை ரயில்வே எடுத்துள்ளது என்றால், பெங்களூர-ஹசூர் சாஹிப் நான்தெத் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டது.இதன் காரணமாக 2014-ம் ஆண்டு ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்பட்டது. ஆனால் கொஞ்சகாலத்திற்கு பிறகு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ரயில்வே முக்கிய உத்தரவு
இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தையடுத்து, இந்த உத்தரவை மீண்டும் செயல்படுத்தி உள்ளது ரயில்வே நிர்வாகம் டேராடூன்- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 13-ம் தேதி திடீரென மின்கசிவு ஏற்பட்டு ராஞ்சி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் இன்ஜின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் உயிரிழக்கவில்லை. பாதிப்புஏற்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்றமுன்னெச்சரிக்கை அடிப்படையில் ரயில்களில் இரவு நேரங்களில் சார்ஜிங் பாயிண்ட்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications