தேர்தல் முடியட்டும், கச்சேரி இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிச்சயம்..? வெளியான முக்கிய ரிப்போர்ட்
சென்னை: உலக அளவில் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஹார்முஸ் வழித்தடத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரலுக்கு 100 டாலரை நெருங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 70 டாலர் அளவில் இருந்த விலை, போர் தீவிரமடைந்ததும் 120 டாலர் வரை உயர்ந்தது. இந்த ஏற்ற இறக்கம் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணம் இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்து வருகிறது. இதனால் உலகளவில் ஏற்படும் விலை உயர்வு நேரடியாக இந்தியாவையும், இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம்
2022 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மத்திய அரசு ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. ஈரான் போருக்கு பின்பு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீது வரியை உயர்த்தியது, இதேபோல் உயர் தர டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டது, விமான எரிபொருள் விலை கூட உயர்த்தப்பட்டது. ஆனால் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. இது நல்ல விஷயமாக தோன்றலாம், ஆனால் இது எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டமாக மாறியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாக காரணத்தால் பெரும் நஷ்டத்தில் உள்ளன.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 18 ரூபாயும், டீசலில் 35 ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்களின் தினசரி அடிப்படையில் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு எரிபொருள் மீதான எக்சைஸ் வரியைக் குறைத்தது. இதன் பிறகு இந்த நஷ்டத்தின் அளவீடு 1,600 கோடி ரூபாயாகக் குறைந்தது. இந்த வரி குறைப்பு பலனை நுகர்வோருக்கு விலை குறைப்பாக அளிக்காமல், நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்பட்டது.
அரசின் சிக்கல்
மத்திய அரசுக்கு எரிபொருள் விற்பனை மூலமாக கிடைக்கும் வரிகள் அரசுக்கு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளன. அரசின் மொத்த வருமானத்தில் சுமார் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த வரிகளை முழுமையாக நீக்கினால் சுமார் 36 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்படும். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும்.
மறுபுறம் விலையை உயர்த்தினால் பணவீக்கம் அதிகரிக்கும், பொதுமக்களின் அன்றாட செலவு உயரும். இந்த இரு பக்க சிக்கல்களுக்கு இடையே மத்திய அரசு சமநிலையை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மத்திய அரசின் தற்போதைய வரி குறைப்புக்கு பின்பும் மத்திய அரசு பெட்ரோலுக்கு 11.9 ரூபாயும், டீசலுக்கு 7.8 ரூபாயும் வரியாக வசூலிக்கிறது. இதை தாண்டி மாநில அரசுகள் விதிக்கும் வரி உள்ளது, இதில் எவ்விதமான மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
தேர்தல் போட்ட முட்டுக்கட்டை
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் காரணத்தால் மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருக்கிறது. தேர்தல் காலத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசு அஞ்சுகிறது. எனவே தற்காலிகமாக விலை உயர்வை தள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் நஷ்டத்தை ஈடுகட்ட விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என மெக்வாரி குழுமத்தின் அறிக்கை கூறுகின்றது.
இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கம்
கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஏற்கனவே 20 பில்லியன் டாலரை நெருங்கும் நிலையில் உள்ளது. எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் உயர்வும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். பணவீக்கம் அதிகரிக்கும்.
அடுத்து என்ன நடக்கும்..?
தற்போதைய நிலைமை அரசியல் லாபத்திற்கும், பொருளாதார யதார்த்தத்துக்கும் இடையேயான சமநிலையை காட்டுகிறது. தேர்தல் காலத்தில் பொதுமக்களின் மனநிலையை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளன. இதனால் அடுத்த சில வாரத்தில், குறிப்பாக தேர்தல் முடிந்த பிறகு, எரிபொருள் விலை உயர்வு வர வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
-
மே 15க்கு பிறகு இந்தியாவுக்கு பெரும் ஆபத்து.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை -
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்















Click it and Unblock the Notifications