சென்னை டூ கன்னியாகுமரி! ‘அன்புடன் அன்புமணி’.. பாமகவின் பக்கா பிளான்! கிராமம் கிராமமாக செல்ல முடிவு!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த பயணத்தின் போது வன்னியர் சங்கம் முதல் தற்போது பாமக வரை இருக்கும் மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து மக்களவை தேர்தலுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்த ஜிகே மணி, கட்சியின் எதிர்கால நலன் கருதி கௌரவத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்..
கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் கட்சியை மறுபிசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக பொறுப்பினை ஏற்றுக் கொண்டதாக பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறினர்.

பாமக 2.0
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை அப்போது தலைவராக இருந்த ஜிகே மணியே வாசித்தார். அதில் கட்சியின் எதிர்கால நலன் கருதி தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இளைஞரணித் தலைவராக இருந்தபோதும் சரி தற்போது தலைவராக இருக்கும் போதும் சரி அன்புமணி ராமதாஸ் பாமக 2.0 என்ற திட்டத்தை அடிக்கடி சொல்லி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ்
அதாவது கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும், திமுக அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல திட்டங்கள் அன்புமணி ராமதாசிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் வன்னியர் சங்க காலம் முதல் பாமகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தற்போது கட்சியில் இணைந்து உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை புதிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

சுற்றுப் பயண திட்டம்
தற்போது பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து வரும் அவர், அதற்குப் பின்னராக இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என பாமக நிர்வாகிகள் கூறியுள்ளனர். கட்சியில் யாரையும் விட்டு தர கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ் இதற்காகவே இந்த திட்டத்தை முன்னெடுத்து இருப்பதாகவும் கடந்த காலங்களை கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்றிணைத்து பாமகவை வலுப்படுத்தவே இந்த சுற்றுப் பயணம் என்று கூறப்படுகிறது.

சஸ்பென்ஸ் திட்டம்
மேலும் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போதும் குறிப்பிட்ட அளவில் அதிக இளைஞர்களை கட்சியில் இணைய வைக்க வேண்டும் எனவும் இந்த பயணத்திட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சுற்றுப் பயணங்களை ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் செய்திருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்புமணி ராமதாஸ் அதில் என்ன புதுமையை புகுத்த போகிறார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் என புள்ளி வைத்து முடித்துக் கொண்டனர் நம்மிடம் பேசிய பாமக நிர்வாகிகள்.
-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications