காமராஜருக்கு நிகராக ஸ்டாலின்! எனக்கு காரியம் நடக்கனும்! பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை!
சென்னை: பெருந்தலைவர் காமராஜரை போன்று முதலமைச்சர் ஸ்டாலினை நினைப்பதாக கூறி சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பாமக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சட்டசபையை கடந்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
திமுக -பாமக இடையே எதிர் எதிர் அரசியல் நடந்து வரும் சூழலில், பாமக எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக முதல்வரை இந்தளவுக்கு புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாமக எம்.எல்.ஏ.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில், தோனிமடவு திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கோரி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சி.எல்.ஏ. அறிக்கையின் படியும், வனத்துறைக்குள் நிலம் வருவதாலும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துவிட்டார். இருப்பினும் அவரை விடாமல் அந்த திட்டத்தை எப்பாடுபட்டேனும் தனது தொகுதிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்தி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேசினார்.

காமராஜர் போன்று
ஒரு கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை போன்று முதலமைச்சர் ஸ்டாலினை நினைப்பதாகவும் இதனால் முதலமைச்சரும், மூத்த அமைச்சரான துரைமுருகனும் தோனிமடவு திட்டத்தை மேட்டூர் தொகுதிக்கு வழங்க வேண்டும் எனக் கோரினார். அப்போது அவருக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த சக உறுப்பினர்கள் பாமக எம்.எல்.ஏ. சதாசிவத்தை நோக்கி ஏதோ கூறினார்கள். அப்போது பேசிய அவர், மன்னிக்கனும், நான் புகழ்வதாக எண்ண வேண்டாம். உண்மையிலேயே சொல்கிறேன், எனக்கு காரியம் நடக்கனும் என மனதில் இருந்ததை ஒளிவுமறைவின்றி தெரிவித்தார்.

காரியம் நடக்கனும்
எனக்கு காரியம் நடக்கனும் என பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனிடையே இதற்கு மீண்டும் இரண்டாவது முறையாக பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தொகுதி மீது கொண்ட பற்று காரணமாக உறுப்பினர் பேசுவது தனக்கு புரிவதாகவும் தோனிமடவு திட்டத்தின் மீது அவர் காட்டும் முனைப்பை தாம் அறிவதாகவும் கூறினார். முடியாது என பொத்தாம்பொதுவாக கூறாமல், தன்னால் இயன்ற வரை இது குறித்து முயற்சிக்கிறேன் என்பதை மட்டும் உறுதியாக அளித்தார்.

எதிர் எதிர் அரசியல்
திமுக -பாமக இடையே எதிர் எதிர் அரசியல் நடந்து வரும் சூழலில், பாமக எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக முதல்வரை இந்தளவுக்கு புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பாமக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சட்டசபையை கடந்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications