Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 மகன்களும் தற்கொலைக்கு சம்மதிக்காததால் அனஸ்தீசியா கொடுத்து தூக்கிலிட்ட மருத்துவர்? ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர், தமது 2 மகன்களும் தற்கொலை செய்துகொள்ள பயந்ததால் அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்து, அவர்களை தூக்கிலிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

Chennai crime suicide

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (52). இவரது மனைவி சுமதி (47) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பெற்றோருடன் சேர்ந்து மகன்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடிக்கும் மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடன் கொடுத்த பலர் நெருக்கடி கொடுத்து வந்ததால், கடனில் இருந்து மீளமுடியாத சூழல் நிலவியதால், மனம் வெறுத்துப் போய் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.

மருத்துவர் பாலமுருகனின் இரண்டு மகன்களும் இந்த தற்கொலை முடிவுக்கு பயந்ததால், அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்த மருத்துவர் பாலமுருகன், அவர்களை தூக்கிலிடச் செய்து, அதன் பிறகு தனது மனைவியுடன் விபரீத முடிவெடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

2 மகன்களும் தற்கொலைக்கு ஒத்துழைக்காததால் மயக்க ஊசி செலுத்தி இரண்டு மகன்களையும் மருத்துவர் பாலமுருகன் தூக்கிலிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+