2 மகன்களும் தற்கொலைக்கு சம்மதிக்காததால் அனஸ்தீசியா கொடுத்து தூக்கிலிட்ட மருத்துவர்? ஷாக் தகவல்!
சென்னை: சென்னையில் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர், தமது 2 மகன்களும் தற்கொலை செய்துகொள்ள பயந்ததால் அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்து, அவர்களை தூக்கிலிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (52). இவரது மனைவி சுமதி (47) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பெற்றோருடன் சேர்ந்து மகன்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடிக்கும் மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் கொடுத்த பலர் நெருக்கடி கொடுத்து வந்ததால், கடனில் இருந்து மீளமுடியாத சூழல் நிலவியதால், மனம் வெறுத்துப் போய் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.
மருத்துவர் பாலமுருகனின் இரண்டு மகன்களும் இந்த தற்கொலை முடிவுக்கு பயந்ததால், அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்த மருத்துவர் பாலமுருகன், அவர்களை தூக்கிலிடச் செய்து, அதன் பிறகு தனது மனைவியுடன் விபரீத முடிவெடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 மகன்களும் தற்கொலைக்கு ஒத்துழைக்காததால் மயக்க ஊசி செலுத்தி இரண்டு மகன்களையும் மருத்துவர் பாலமுருகன் தூக்கிலிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications