டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் உட்பட 24 அதிகாரிகள் இடமாற்றம்.. பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் டிஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 24 காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் புத்தாண்டின் போது தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டது. முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியான சூழலில், பின்னர் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் பலரும் பதவி உயர்வின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராயபுரம் உதவி ஆணையராக இருக்கும் ராஜாபால், சென்னை கிரைம் பிரான்ச் உதவி ஆணையர் காயத்ரி, மீனம்பாக்கம் உதவி ஆணையர் முகேஷ் ஜெயக்குமார், செண்ட் தாமஸ் மவுண்ட் உதவி ஆணையர் முரளி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கிண்டு உதவி ஆணையர் விஜயராமலு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதி ராஜன், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பால் ஸ்டீபன், வரதராஜன், ஷிபு குமார் உள்ளிட்டோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்குள்ளேயே இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 24 காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது பேசுபொருளாகி இருக்கிறது.
-
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications