மழை பெய்தாலே மின் தடை? “இன்று எங்குமே பவர் கட் இல்லை.. காரணம் இவர்தான்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த காலங்களில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் இல்லை, இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கையே காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

மழையிலும் மின் தடை இல்லை

மழையிலும் மின் தடை இல்லை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையிலும் மழையால் மின்தடை பாதிப்பு இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். குறிப்பாக, இந்த மழைக்கால சிறப்பு பணிக்காக 11,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு களப்பணியாற்றி வருகின்றனர். 1,040 பணியாளர்கள் பகலிலும், 600 பணியாளர்கள் இரவிலும் பணிபுரிந்து, மின் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

சின்ன மழை பெஞ்சா போதும்

சின்ன மழை பெஞ்சா போதும்

கடந்த காலங்களில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. லேசாக காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தச் சூழல் இப்போது இல்லை. தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் போட்ட உத்தரவு

ஸ்டாலின் போட்ட உத்தரவு

எவ்வளவு மழை பெய்தாலும் சரி, மின் விநியோகம் நிறுத்தப்படக் கூடாது. பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும், அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மொத்தமே 2.20 லட்சம் விவசாய மின் இணைப்புத் தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு அமைந்த 15 மாதத்தில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

பில்லர் பாக்ஸ்

பில்லர் பாக்ஸ்

மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னையில் ஏறத்தாழ மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில், பெருநகர் மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. மின் விநியோகத்தை பொறுத்தவரை இன்னும் சென்னையில் விடுபட்ட இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் மழையால் பாதிப்பு இல்லாத இடங்களில் கூட 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்படும்.

இரவோடு இரவாக

இரவோடு இரவாக

நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தாலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் மட்டும் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதுவும் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டது." எனத் தெரிவித்தார், மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+