கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணம்.. மீண்டும் லாக்கப் மரணமா? - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?
சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீஸ் தாக்குதலால் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக் கைதி ராஜசேகர்
சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை நேற்று இரவு திருவள்ளூரில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் மீது கொள்ளை, வழிப்பறி என 23 வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின்போது மரணம்
கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்ற அப்பு இன்று உயிரிழந்துள்ளார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ராஜசேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அழைத்து வரும்போதே
விசாரணைக்கு அழைத்து வரும்போதே ராஜசேகரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ராஜசேகரை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும், இதையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாக்கப் மரணம்
சமீபத்தில், சென்னையில் விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை போலீசார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மீண்டும்?
காவல் நிலையங்களில் நிகழ்ந்த லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை இரவு நேரத்தில் விசாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார். இந்நிலையில், கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிசிஐடிக்கு மாற்றம்
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறை டிஜிபி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணையை தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications