10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளில் சிசிடிவி கட்டாயம் - தேர்வுத்துறை அதிரடி
10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அரசுத்தேர்வுத்துறை இயக்கவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. உடனுக்குடன் வேறு கேள்விகள் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கும் அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

வினாத்தாள் கசிவு
ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்விலும் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பான நிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு இராண்டாம் திருப்புதல் தேர்வில் கணித தேர்விற்கான வினாத்தாள் கசிந்தது.

பொதுத்தேர்வு
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து, புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது. மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். மேலும் திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சிசிடிவி கேமரா
இதனிடையே தற்போது 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறையில், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

இரட்டை பூட்டுக்கள் அவசியம்
தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications