விடவே மாட்டோம்.. ராகுல் தான் அடுத்த தலைவர்.. தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் உள்ள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது, மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து பிற கட்சிகளில் சேர்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இக்கட்டான நிலையில் காங்கிரஸ்
இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஷயத்திலும் பெரும் குழப்பம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்த அவரது தாயார் சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் தற்போது முன்பு போல் தீவிர களஅரசியலில் இல்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தான் அரசியல் களத்தில் உள்ளனர். இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சி மக்கள் செல்வாக்கை பெற்று மீண்டும் தேர்தல் அரசியலில் சாதித்து காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.

உள்கட்சி தேர்தல்
இதனை செய்து காட்டும் நிலையில் தான் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோமீட்டர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி உள்ளார். தமிழகத்தில் துவங்கிய யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராகி வருகிறது.

சென்னையில் பொதுக்குழு கூட்டம்
இதற்கிடையே தான் இன்று சென்னையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராகுல்காந்தியின் நடைப்பயணம், உள்கட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராகுல் தலைவராக தீர்மானம்
அதன்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை மாநில தலைவர் கேஎஸ் அழகிரி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதன்பிறகு சட்டீஸ்கர், பீகார் உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டு வரும் நிலையி்ல தான் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications