ராகுல் காந்தி கல்லூரி நிகழ்ச்சி மணிரத்னம் படம் மாதிரி இருந்தது.. கே.எஸ்.அழகிரி சொல்கிறார்
சென்னை: மணிரத்தினம் திரைப்படம் போல ராகுல் காந்தியின் கல்லூரி நிகழ்ச்சி இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திமுக-காங்கிரஸ் இடையே, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்தார் கே.எஸ்.அழகிரி.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர். அப்போது காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பெயர்கள் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தகவல் தெரிவிப்பார் என்று கூறினார்.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்மறை அரசியல் பேசி மாணவிகளிடம், குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக நிருபர்களால் அப்போது, கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அழகிரி, மிகவும் நேர்மறையான, அன்பான, எளிமையான ஒரு தலைவர் ராகுல் காந்தி. தமிழக மக்கள் மீது அவர் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்.
மணிரத்னம் திரைப்படம் போல ராகுல் காந்தியின், கல்லூரி நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் இயல்பாக ராகுல்காந்தியின் உரையாடல் இருந்தது. அன்பின் மிகுதியால்தான் பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவினேன், என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதில் வெறுப்புப் பிரச்சாரம் எங்கே உள்ளது? இவ்வாறு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications