அரசியலுக்கு வராட்டி 4 பேர் நாலு விதமா பேசுவாங்க.. அதுக்காக யாரையும் பலிகடாவாக்க விரும்பலை.. ரஜினி
சென்னை: அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னால் என்னை 4 பேர் 4 விதமாக பேசுவார்கள்தான். அதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 3 ஆண்டுகள் எந்த ஒரு கல்லையும் நகர்த்தாமல் இருந்த ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அரசியல் கட்சியை தொடங்குவேன் என உற்சாகமாக அறிவித்தார்.

வாழ வைத்த தெய்வங்கள்
மேலும் என் உயிரே போனாலும் பரவாயில்லை. என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு நான் நல்லது செய்தாக வேண்டும் என்றார். இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி அவர் கட்சி குறித்த அறிவிப்புகளை எல்லாம் அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று அரசியலுக்கு முழுக்கு போட்டு ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகள்
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்றார், 3 ஆண்டுகளாக எந்த துரும்பையும் கிள்ளவில்லை, பின்னர் மீண்டும் வருவேன் என்றார், தற்போது அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறார், இதனால் ரஜினி மீது என்னதான் கோபம் இருந்தாலும் அவருடைய நல்லெண்ணத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

நம்பினோர்
அவரது அறிக்கையில் அவரது நல்ல குணம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. அதாவது என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் 4 பேர் 4 விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருவோரை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

வருத்தம்
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார்.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!












Click it and Unblock the Notifications