Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக இறங்கிய ரெடிமேட் கால்வாய்.. சாலைகளில் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்! அதென்ன Precast?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை கோயம்பேடு - வடபழனி சாலையில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் முயற்சிகளில் பெரிய பலன் கிட்டாத நிலையில், ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கனமழையால் சாலையில் தேங்கிய தண்ணீரை இரவோடு இரவாக அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 'ப்ரீகாஸ்ட்' எனப்படும் ரெடிமேட் கால்வாய்கள் கொண்டு வரப்பட்டு, சாலைகளின் நடுவே தோண்டப்பட்டு, கால்வாயை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.

மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவதற்குள் பருவமழை தீவிரமடைந்ததால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதை அகற்ற ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலைகளில் மழைநீர்

சாலைகளில் மழைநீர்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால், சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

பருவமழையை எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு தண்ணீர் பெருமளவில் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைவதற்குள் பருவமழை தொடங்கியதால், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் சூழல் நிலவுகிறது.

கோயம்பேடு - வடபழனி

கோயம்பேடு - வடபழனி

சென்னை கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்லும் 100 அடி சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரவோடு இரவாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மோட்டார்கள் வைத்து டிராக்டர்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 ரெடிமேட் கால்வாய்

ரெடிமேட் கால்வாய்

அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ரெடிமேட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழல் நிலவும் பகுதிகளில் சாலைகளுக்கு நடுவே தோண்டி, ரெடிமேட் கால்வாய்களை பதித்து, இணைத்து, அதன் வழியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வடபழனி பகுதியில் ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ப்ரீகாஸ்ட்

ப்ரீகாஸ்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் கால்வாய்களை இணைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக ரெடிமேட் முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

அவசர பணிகளுக்கு

அவசர பணிகளுக்கு

ப்ரீகாஸ்ட் (precast) எனப்படும் கால்வாய் போன்ற ரெடிமேட் கட்டுமானத்தை பயன்படுத்தி குறைவான நேரத்தில் கால்வாய்களை அமைக்க முடியும். அவசரத் தேவையாக மழைநீர் வடிகால்களில் இணைப்பு வழங்கும் வகையில், சென்னையில் 34 இடங்களில், ரெடிமேட் கான்கிரீட் பயன்படுத்தி விரைந்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இந்த ரெடிமேட் கால்வாய்களை பயன்படுத்தி, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+