"அது" மட்டும் நடந்தால் செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடுமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது? ஆண்களே உஷார்!
சென்னை: வயதானால் மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் குறையும் என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒயின் போல மனிதர்களின் வாழ்விலும் நாட்கள் செல்ல செல்ல பாலியல் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்களை பொறுத்த அளவில் 20 வயதிற்குள் அவர்கள் அதிக பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் உடலுறவில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் குறித்த கவலைகள் அதிகமாகும். எனவே அவர்கள் செக்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டத்தை இழக்க தொடங்குவார்கள். ஆனால், இவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது என்பது இதன் அர்த்தமல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் வயதாக ஆக ஆண்களுக்கு விறைப்புத் தன்மை தொடங்கி பல்வேறு பிரச்னைகள் உருவாகும். இறுதியில் அதிக வயதில் குறைந்த செக்ஸ் மற்றும் அதிக பாலியல் பிரச்னைகளில் அவர்கள் சிக்கிக்கொள்வார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆனால் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் மனம் தன் போக்கில் போய்க்கொண்டேதான் இருக்கும். இதனால் உடலும் விரைவில் பழையபடி திரும்பும். இது குறித்து வெளிவந்துள்ள ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதாவது,

பாலியல் உச்சம்
"ஆண்கள் 20 வயதில் அதீத பாலியல் உச்சத்தை அடைவார்கள். ஆனால் குடும்ப பொறுப்புகள், கடன், குழந்தைகள் இவையெல்லாம் சேர்ந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி அவர்களை பாலியல் பிரச்னைக்குள் தள்ளிவிடும். ஆனாலும் 20 வயதில் இருந்ததை போலவே 40 வயதிலும், 50 வயதிலும் இவர்கள் மீண்டும் பாலியல் உச்சத்தை எட்டுவார்கள். 60 வயதுக்கு பிறகுதான் இது சரியத் தொடங்கும். தங்கள் இணையுடன் வீட்டை பகிர்ந்துகொள்வது, உறுதியான உறவில் இருப்பது ஆகியவை பாலியல் திருப்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வயதாக வயதாக பொது ஆரோகியம் மற்றும் பாலுறவு திறன் மோசமடைந்தாலும் 30 வயதில் அனுபவித்த பாலியல் உச்சத்தை 50 வயதிலும் அனுபவிக்க முடியும்.

கவனம்
உடல் ஆரோக்கியமும், சிறப்பான வாழ்க்கை முறையும் கொண்டுள்ள ஆண்கள் பெண்களை விட அதிக அளவு செக்ஸில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இந்த சுறுசுறுப்பு அவர்கள் வயதான பின்னரும் தொடர்கிறது. எதிர்பார்ப்புகளை தெரிவிப்பது உடலுறவில் ஏற்படும் சிக்கல்களை கையாள்வது போன்றவை வயது மூப்பின் அனுபவத்தால் ஆண்கள் பெறுகிறார்கள். இவைகள்தான செக்ஸில் ஆண்களை கில்லாடிகளாக மாற்றுகிறது. பெண்களை பொறுத்த அளவில் இதற்கு நேர் மாறாக இருக்கின்றனர். அவர்கள் இதில் அதிக கவனத்தை செலுத்துவதில்லை.

வயது
50 வயதில் இருக்கும் ஆண் குறைவான அளவு செக்ஸில் ஈடுபடலாம். ஆனால் அது பரிபூரணமாக இருக்கும். 20 வயதில் அவர்கள் அனுபவித்ததை 50 வயதிலும் அனுபவிப்பதை போல உணர்வார்கள். பாலியல் பிரச்னை என்பது வெளிப்படையாக பேச வேண்டியதாகும். ஏனெனில் இது நம்மை பற்றியது கிடையாது. நம்முடைய அடுத்த தலைமுறையை பற்றியது என்கிற உணர்வு நமக்கு முதலில் வர வேண்டும். சில குழந்தை பெற்றதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு நீங்கள் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஆய்வு
நம்முடைய ஆரோக்கியத்தில் செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் நம்முடைய தலைமுறையினர் சிறப்பாக வளர்வார்கள். எனவே இதில் இருக்கும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை காண மருத்துவர்களை அணுக வேண்டும்" என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications