Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று முதல் அமல்.. டாஸ்மாக்கில் காலி மதுபாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் ரீஃபண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்று (ஜனவரி 6) முதல் அமலுக்கு வருகிறது. காலி மது பாட்டில்களை அதே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒப்படைத்தால் ரூ. 10 திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டம் ஏற்கனவே நீலகிரி, கோவை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

tasmac chennai liquor

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கும் போது அதன் விலையுடன் கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும். மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளிலோ ஒப்படைக்கலாம். பாட்டிலை ஒப்படைக்கும் போது ஏற்கனவே கூடுதல் தொகையாகச் செலுத்திய 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தவேண்டும்.

மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+